காதலின் தீபம்

❤️என் உள்ளமும் உணர்வும்                        உறைந்து போனது...
    உன் கண்ணில் என் பிம்பம் 

❤️சதையாலான 
    சவப்பெட்டி
    அவள் விழிகள்...!!

❤️உயிர்களை கொல்லும் 
     மந்திர குளம்
     அவள் ஊமை விழிகள்...!!

❤️என் நெஞ்சம் மஞ்சம்
    இரண்டிலும் தஞ்சம் கொண்ட                நந்தவனப்பூ அவள்...!

❤️பார்வையிலே விதைத்து விட்டு           சென்றாய்.காதல் என்னும்                       விதையை.. 
   மலர் பூத்து நிற்கின்றேன்.. 
   எனை வாசம் செய்து விடு...!!

❤️என் மனவானில் சஞ்சரிக்கும்                பொன் நிலவு நீ... 
    மோக மேகங்கள் அவ்வப்போது             நமை கடக்கின்றன...!!

❤️முத்தங்கள் மொத்தம் எத்தனை
   சத்தமில்லாமல் கேட்டேன் அவளிடம்
   சத்தமில்லாமல் பதிலளித்தாள்..
   என் கன்னங்கள் சிவந்தது...!!

❤️சேற்றினில் மலர்ந்த செந்தாமரை         நீ என்னுடன் வா..
    என் அக சந்நிதியில் 
    உனை ஸ்தாபிப்பேன்...!!

❤️உன் ஸ்பரிசம் பட்ட அன்றே..
    பரிசம் போட்டு விட்டேன்...
    பகலும் இரவும் இனி எனக்கு                  சொந்தம்...!

❤️சன்னலோர இருக்கையில் சாய்ந்தபடி தூங்கினேன்..கனவிலே  கலியாணம் எனக்கு அவளுடன்... இறுதி ஊர்வலத்தில் எவனோ எறிந்த சாமந்திப்பூ என் மேல் வந்து விழுந்தது...!!

❤️ பிரம்மனின் தூரிகைத் துளிகள் 
     அவள் முகத்தில் பருக்களாக..!

❤️ ரோட்டோர கடைதான்
      குட்டி நிலாக்களை விற்றுக்                      கொண்டிருந்தாள்..அவள்                        விந்தையானவள்..!

❤️அவளை நிலாவென்று                            வர்ணித்தேன் பலமுறை ... 
    அதனால் தான் ஏனோ அவள்                  நிலவாகிப்போனாள்...!

❤️நான் குண்டாகி விட்டேன்                        என்கிறாய்...
    அனுதினமும் பசியாற்றியது                   நீயல்லவா...!

❤️ஓடாத கடிகாரம் அது
     உன்னையும் என்னையும்                         பார்த்தேன்
     திசைமாறிய முட்களாய்...!

❤️உணவு பரிமாறினாள் என் 
     உள்ளம்      தடுமாறியது.. 
     அவள் கரத்தில் என்ன                               மந்திரக்கோலா..!!

❤️என் மனம் கண்ணாடி தான்
    அதை உடைத்தது நீ..
    ஒருநாள் அது உனை
     பதம்        பார்க்கும்..!

❤️ஒரு கன்னத்தில் முத்தமிட்டாள்...          மறுகண்ணம் சிவந்து போனது...
    வெட்கத்திலா... வேதனையிலா...!!

❤️என் ஐவிரல் பள்ளங்கள்                           நிரப்பப்படுமா உன்னால்..
     கைவிரித்தப்படி நான்..!!

❤️கல்லூரி கரும்பலகையில் 
    காதல் என்று எழுதினேன்..
    அழித்துவிட்டுசென்றாள்..
    வேதனைபட்டோம்
    நானும் கரும்பலகையும்...!!

❤️அமாவாசை நாளன்று                               ஆயிரமாயிரம் விண்மீன்கள் 
     ஆவலோடு பார்க்கின்றன...
     அவள் முகத்தை...!

❤️மோக மின்னல் 
     சட்டென்று பாய்ந்தது...
     பற்றிக்கொண்டது கட்டில் தீ...!

❤️அவள் நிலவல்ல 
     வானம் தொலைத்த 
    விண்மீன்...!

❤️ஓவியப்போட்டி..!
    அவளுக்கே முதல் பரிசு..
    நான் விரல்களால் வரைந்தேன்..          அவள் இதழ்களால் வரைந்தாள்..🙈

❤️ சத்தமில்லாமல் கொன்றுவிட்டாள்.
     கட்டில் யுத்தங்களை
     கண்களால் நடத்தியே...!!

❤️இரு மரங்கள் உரசியது 
     பற்றியது காட்டுத்தீ... 
     இரு மனங்கள் உரசியது                           பற்றிக்கொண்டது காதல் தீ...!!

❤️ஒளிப்பட்டதும் களிப்பாடும் 
     மலர் மொட்டுக்களே....
     அவள் விழிப்பட்டால் தாம்                         என்னாவீர்கள்...!!

❤️ என் காதல் கைகூட வேண்டும்
      கடவுளிடம் வேண்டினேன்
      கன்னத்தில் கைவைத்தப்படி
      அரசமரத்தடி பிள்ளையார்...!!

❤️ தேன் தேடி தேனீக்கள்
      என் வீட்டருகே வந்தது
      உன் வீட்டிற்க்கு வழி சொன்னேன்
      மலரே மறைந்துகொள்...!!

❤️ காதலும் காமமும்
      புத்தகத்தின் அட்டைப்படம் நீ....!!

❤️ நிலவினைக் கண்ட
     அல்லி மலராய்
      பூத்து நின்றேன்... உன் கண்களில்        நான்...!

❤️ உன்னோடான இரவுகளில்
      உயர உயர பறந்து                                      கொண்டிருந்தேன்....
      என் இறகுகளும் என் காதலும்                உதிர்ந்து கொண்டிருப்பதை                    அறியாமல்...!

❤️ என் இதயத்தின் குரல் 
      எனக்கு   கேட்கின்றது
      அவள் வருகின்றாள்...!

❤️  நம் மோக மேகங்கள்
       மோதிக்கொண்டது...
       கொட்டித்தீர்த்தது மழை..!

❤️ என் அந்தரங்க வானில்
     அனுதினமும்                                                 மின்னிக்கொண்டிருக்கிறாய்...
     தொலைதூர நிலவாய்..!

❤️ உயிரும் உயிரும் 
     ஒன்றிணைந்தது..
     உடைந்தது கட்டிலும்
      கண்ணாடி     வளையலும்...!

❤️ அழகினால் கொலைகள்                          செய்பவள் அவள்..
      கண்ணாடி வளையல்களாள்                  கைது செய்தேன் அவளை..!!

❤️ அவள் பிறந்தநாளுக்கு குரங்கு              பொம்மை பரிசளித்தேன்...                      கோபத்தில் தூர                                          எறிந்துவிட்டாள் சந்தேகமில்லை          அவள் குரங்கு தான்...!

❤️ திரியாக கரைகின்றேன் ...
      தீபமான உனை நினைத்து...!!

❤️ என் கருப்பு வெள்ளை
      கனவுகளின்...முதல்
      கலர்ப்படம் நீ...!

❤️ சிறகுள்ள மீன்களை கண்டேன்...
      அவள் கண்களில் ..!

❤️ நம் காதல் பயணங்கள் 
      இனிதே தொடங்கியது...
      நம் நயணங்களில் இருந்து...!!

❤️ அமைதியாய் உறங்கும்
      எரிமலை நான்...
      என்னுள் நீந்த நினைக்காதே . !

❤️ தலைசிறந்த சிற்பி
     மார் தட்டிக்கொள்வார்
     அவள் அப்பா...!

❤️ பட்ட மரமாகிய என்னுள்... கொத்தி       குடைந்து புகுந்தாய்..
      சிறிதாய் துளிர்விட்டது என்                    கிளைகள்...!

❤️ பருவம் வரை காத்திருந்தேன்
     அந்த பூவிற்கு...
     அழகை ரசிக்கவா..
     தேனை ருசிக்கவா...!

❤️ காதல் திருமணம்..
     விரட்டியடித்தது சொந்தக்கார                 நாய்கள்...
    ஆரத்தி தட்டோடு காத்திருந்தது               சுடுகாட்டுப் பேய்கள்...!

❤️ இடி மின்னலுடன் கனமழை                    பெய்து கொண்டிருந்தது ...
      இருட்டான அறைக்குள்..!

❤️ என் மனவானில் 
      எத்தனையோ நட்சத்திரங்கள்                பூக்கின்றன ..
      நிலவாய் நீ வரவேண்டும்...!!

❤️ என் மனக்காட்டில்
      ஏன் நுழைந்தாய்
      அனைத்து மரங்களும்
      மலர்ந்துவிட்டது...
      வண்ணத்துப்பூச்சிகள் வந்து                  விடும்..!

❤️ காதலிக்கத் தொடங்கிவிட்டோம்
      வா கண்ணீர்க் கடலில்
      நீந்தலாம்...!

❤️  ஜானா முழமா..
      அளந்து கேட்டார்
      மல்லிப்பூ விற்கும் பாட்டி..
      அளவில்லா காதலென்றேன் ..!

❤️      தேநீர் பருக
       தினமும் வருவாள்
       என் மனதை பருகி
        மாயம் செய்வாள்...

❤️ மூன்றாம் பிறை அவள்
      முகத்தில் சுருக்கங்களோடு                    முத்தமிட்டாள் ...
      முழு நிலவானேன்...!

❤️ நம் காதல் என்றும்
     உறங்குவதில்லை
     அது நம் கல்லறை மீதும்
     விளையாடிக் கொண்டிருக்கும் ..!

❤️ அவள் உள்ளங்கையில்
     முத்தமிட்டு தூரே ஊதிவிட்டாள்...         காற்று காப்பாற்றி
    என் கைகளில் ஒப்படைத்தது..
    பத்திரமாய் வைத்துக்கொண்டேன்.!

❤️ இடம் விற்பனைக்கு
     அவள் இதயத்தில்                                       எழுதியிருந்தாள்..
     வாடகைக்கு கேட்டு வந்தேன்...!

❤️தொடரும் கனவுகளில்                               தொலைகின்றேன்.. தூரத்தில் நீ           தெரிகின்றாய்.. இன்னும்                         தொடர்கின்றேன்...!

❤️ஆயிரம் பாவைகளில்
     அவள் மட்டுமே ஓவிய பாவை..
     அவள் வண்ணங்கள்
     ஒட்டிக்கொண்டது என்னுள்...!

❤️அவளை கண்டபோது
    அறிந்துகொண்டேன்..
    அந்த ஆயனரை விட அவள்                    அப்பன்  சிறந்த கலைஞன் என்று...!

❤️அவளுக்கு பிடித்த பறவை                      ஆந்தையாம்..இன்றிலிருந்து 
    அந்த இரவும் எனக்கு பிடிக்கும்...!

❤️இதயத்தை இடம் மாற்றுவோம்..
     இருக்க அணைத்துக்கொள்                    என்றேன்..!
    எச்சிலை இடம் மாற்றிவிட்டாள்..! 😅

❤️இருட்டு அறையில்                                       பதுங்கியிருந்தது என் இதயம்..
     சன்னல் வழியே பார்த்துக்                       கொண்டிருந்தது அவள் விழிகள்..!

❤️மூச்சிழுத்து முத்தமிடு
     செத்தாலும் வாழட்டும் 
     நம் காதல் ..!

 ❤️சத்தமாய் கத்திவிடு
     சங்கடங்கள் குறையும்...
     முத்தமாய் குடுத்திடு 
     மொத்தமும் கரையும்...!

❤️காதலெனும் திருவிழாவில் அன்று      அவளை தொலைத்தேன்..
    கனவெனும் தேரில் இன்று
    உலா        வருகின்றாள்...!

❤️நம் உறவின் தூரத்தை 
     அளவிட முயன்றேன்...
     ஊர் தாண்டும் முன்பே                               முடிந்துவிட்டது...!

❤️செல்லும் இடமெல்லாம்
     ஒருவரை காதலித்தேன்...
     என்னை மட்டும் வெறுத்தேன்..!

❤️எதேச்சையாக கண்டேன்
     அந்த முகத்தை..
     இன்றுவரை அனுபவிக்கின்றேன்
     அதன் தாக்கத்தை...!

❤️மனநோய் முற்றிவிட்டால்
     மரணம் வந்துவிடும்
     காதலர்கள் வாக்கு...!

❤️இருவருக்கும் இடையேயான                  மனநோய்க்கு காதல் என்று                    பெயர்...!

❤️ராஜாவும் நானே
    அரண்மனையும் நானே...
    ராணியாக நீ வந்தால்..!!

❤️என் மரணத்திற்கு
     துணை வருவாயா என்றேன்...
     இல்லை.. மலர் வளையத்தோடு 
     மயானத்தில் காத்திருப்பேன்                 என்றாள்..!

 ❤️பொய்தான் எனினும்
      ரசிக்கின்றேன்...
      உரைத்தது நீயல்லவா...!

❤️என் காதலி எனக்கு பரிசளித்தாள்
     மருந்துப்புட்டி ஒன்று..
     அன்று புரியவில்லை
     இன்று விளங்கியது...

❤️அழகி அவளைக் காணாமல்
     அலைகடலும் கொந்தளிக்கிறது..
     அமாவாசை நாளில்...!

❤️மேடையில் ஒரு பூ
     சுற்றிலும் வண்ணத்துப் பூச்சிகள்..
     திருமணவிழாவில்...!

❤️என் கவிதையை
     உண்கிறது அவள் உதடுகள்..
     உயிர்துடிக்குது என்
     கவிதையின் நரம்புகள் .!

❤️நீ என் அருகில் இருந்தும்
     நிலவிடம் உரையாடிக்                               கொண்டிருந்தேன்..
     நானே ஆகச் சிறந்த முட்டாள்..!

❤️சொர்க்கமா நரகமா
     எதைத் தேர்ந்தெடுப்பது..
     இரண்டையும் தந்துவிட்டு                         சென்றாள் ஒரு பெண் ..!

❤️அழுக்கு துணியெல்லாம்
     அவளின் வாசனை
     அலச மனமில்லை
     அப்படியே அணிந்து கொண்டேன்.!

❤️அவள் முழுமதியும் அல்ல
     பிறைமதியும் அல்ல...
     அவள் வளர்மதி...!!

❤️தீபம் உனை தீண்டினேன்..
    மெழுகுவர்த்தி என்பதை மறந்து...!

❤️இரவுக்கு ஆயிரம் கண்களாம்..
     என்னிரவுக்கு ஒரே கண்.. அதில் நீ        மட்டுமே தெரிகின்றாய்...!

❤️முத்த சூத்திரம்
     மொத்தமும் கற்றுக் கொண்டேன்..
     எழுதிக் காட்டுகிறேன்
     என் அருகில் வா...!

❤️இருயிதழ் தொடவே
     ஒருவிரல் புரட்சி
     இச்சகள் பல...!

❤️இரவு வந்தது
    இதிகாசம் பயின்றேன்
    நிலவிடமும் அவளிடமும்..!

❤️இன்று வரை காத்திருக்கிறேன்
     அந்த பௌர்ணமிக்கு
     அமாவாசையாகிய நான்!

❤️நான் இங்கிருக்கிறேன்
    கத்தி சொல்லுவேன்
    அந்த வானத்து தேவதைகளுக்கு..!

❤️அவள் மலர் முகத்தில்
    சில மொட்டுகள் வளர்ந்துள்ளது...
    பருவகாலம் வந்துவிட்டது போலும்..

❤️வாரக் கடைசியில்
     என் காதலையும் கண்ணீரையும் 
     புதுப்பித்துக் கொள்வேன்.
     வயல்காட்டு கோவிலொன்றில்..!

❤️கனிகள் தாங்கிய
     மரம் அவள்..
    நிழலில் தங்கியே
   மோற்றம் பெற்றேன்...!

❤️ஆயிரம் பாவைகளில்
     அவள் மட்டுமே ஓவிய பாவை..
     அவள் வண்ணங்கள்
     ஒட்டிக்கொண்டது என்னுள்...!

❤️நதியின் பயணம்
     கடலை சேரும்வரை
     நம் காதலின் பயணம்
     கல்லறையில் சேரும்வரை...!

❤️இலையாக நீ வந்தால்
     நதியாக நானிருப்பேன்...
     என் வாழ்வு எதுவரையோ                       அதுவரை துணைநிற்பேன்...

❤️கண்ணுக்குள் நீந்துவதால்
     காதலும் மீன் தானோ....!

❤️என் கண்ணீர் எனக்கு புதிதல்ல.
     உனக்காக சிந்துகின்றதே                       அதுதான் புதிது...!
  
❤️உலகம் மறைவதை
     ஒருமுறை பார்ப்போம்
     வா முத்தமிடலாம்...!

❤️என் கண்ணிற்குள் நுழைந்தவள்           ஏணி போட்டு இறங்கி                               கொண்டிருக்கிறாள் .. இன்னும்             இரண்டு மணி நேரத்தில்                         இதயத்தை சென்றடைவாள்..!

❤️தொடரும் கனவுகளில்                               தொலைகின்றேன்.. தூரத்தில் நீ           தெரிகின்றாய்.. இன்னும்                         தொடர்கின்றேன்...!

❤️அவளை கண்டபோது
     அறிந்துகொண்டேன்..
     அந்த ஆயனரை விட அவள்                     அப்பன் சிறந்த கலைஞன் என்று...!

❤️நீரில் ஊறிய பூங்கொடியாய்
     நித்தம் நித்தம் பூக்கின்றேன்..                 சித்தம் வருடும் உன் நினைவால்...

❤️உள்ளிருக்கும் ஆவியே                             ஒளிந்துகொள்... உனைத் தேடி               அவள் வருவதற்குள்...!

❤️அவளை கண்டதும் பார் பக்தி                 வரும் என்றனர் சிலர்...
     முக்தியே தந்துவிட்டாள்..

❤️என் மோககுளத்தில் மூழ்கி                     குளிக்கின்றாய்... மோட்சம்                       பெற்றது நானல்லவா...









Comments

Popular posts from this blog

வா வா நிலவே

பாட்டு ஒன்னு பாடவா