வெள்ளைபுறா

 
    வாழ்வியல் தத்துவ கவிதைகளும்
என்னோடு உறவாடும் எண்ணற்ற சிந்தனைகளின் வெளிப்பாடும் இங்கு சிறகு விரிக்கும்.....!!

🪶.    நிலவில்லா நட்சத்திரமில்லா                 அந்த இரவுகளில் தனிமையின்             கதவுகளில் முட்டிக்                                     கொண்டிருப்பேன்...!

🪶.    வாழ்வெனும் கடலில்
          துடுப்புகளற்ற ஓடங்களாய்                      தவிக்கின்றேன் ..

🪶.    எனை எரிப்பதற்கு
         விறகுகள் வேண்டாம்
          மலர்கள் போதும்
         மௌனமாய் சூடிக்கொள்வேன்..!

🪶.    நான் இன்றும்
         பாலகனாய் இருந்திருந்தால் 
         அந்த பூச்சிகளையே அதிகம்                   நேசித்திருப்பேன்...!

🪶.    என் கண்ணீர் குளத்திலும்
          சலசலப்பு சத்தம்..
         வலிகளும் வேதனைகளும் 
          நீந்திக்கொண்டிருக்கின்றன...!

🪶.    விழும் விதைகளெல்லாம்
          விருட்சங்கள் ஆவதில்லை
          விருட்சங்களாகிய விதைகள்                 எல்லாம்  விழாமல்                                        இருந்ததில்லை...!

🪶.     இருட்டில் மறைந்துள்ளது
           காக்கையோ ஆந்தையோ
          யார் அறிவார்..
          விடியும் வரை காத்திருப்போம்...!

🪶.    வண்ணத்துப்பூச்சி வாழ்ந்து                    முடித்துவிட்டது...
          அதன் சாயங்களே என்னுள்                    காயங்களாகி விட்டது...!

🪶.    உணவிட்டு வளர்த்து
         உயிர்க் கொலை செய்து
         உப்பிட்டு உண்கிறான்                              அதை..மிருகத்திலும் மிருகம்                  மனிதன்...!!

🪶.    அழிக்கப்பட்ட                                                காடுகளுக்கிடையில்
         ஆரவாரமாய் எழும்
          ஒரு விதையாய் இருப்போம்....!

🪶.      யார் அது
            தருமன் விராடன்
            என் தந்தையை 
            தெரியுமா அவர்களுக்கு...!

🪶.     எண்ணுலகம் சுருங்கியதை                   உணர்த்தியது என் முகம்..
           தூரத்தில் எருமையின் குரல்..!

🪶.     வாழ்வில் தடுக்கிவிடும் கற்கள்
           தாராளமாய் இருக்கும்..                             கவனமோடு கடந்து வா..
           தடுக்கினாலும் கவலை                             கொள்ளாதே
           தன்னம்பிக்கையோடு  
           எழுந்து      வா...!

🪶.    மனம் மரணிக்கின்றது                              பலமுறை...ஏனோ உடல்                            ஒத்துழைப்பதில்லை..
          இன்று வரை வாழ்கின்றேன் .!
 
🪶.    தனிமையை காதலிக்காதீர்கள்
         அதுவும் சுயநலவாதிதான்..
         ஒரு சில காலம் உன்னோடு                     இருந்துவிட்டு ஊர் தாண்டி                     ஓடிவிடும்...!!

🪶.    கிளைகள் இலைகளை                              துறந்ததா..இல்லை
          இலைகள் கிளைகளை                              துறந்ததா...
          எதும் புரியவில்லை எனக்கு...!

🪶.   வேகமாய் செல்லவேண்டும்..                 விடியப் போகிறது..
         கையில் இருப்பதோ ஒரு                         ஓட்டைப்படகு...! 

🪶.    சோம்பல் முறித்து 
          சுகமாய்             எழுவேன்..
          சுவற்று கடிகாரத்துடன்                              உரையாடிய பின்..!

🪶.    செல்லும் இடமெல்லாம்                            ஒருவரை காதலித்தேன்...
          என்னை மட்டும் வெறுத்தேன்..!

🪶.    இறக்கைகள் இல்லாவிட்டாலும்
          பறவை நான்...
          முடிந்தால் என்னைப் பிடிக்கப்                பார்...!

🪶.     பெற்ற பிள்ளையென்றால்
           பூனைகூட புலியாய் மாறும்..
           பகைத்துப்பார் புரியும்                               உனக்கு...!

🪶.      சிறகடித்துப் பறந்தது
            சிட்டுக்குருவியொன்று...
            சிக்கிகொண்டது
            சிந்திய இறகுகள்...!

🪶.     என் மனச்சந்தையில்
          பூக்கடைகளை நிர்மாணித்தேன்.
          சாக்கடைகளும் எங்கிருந்தோ                வந்துவிட்டது...!

🪶.    மறுபிறவியில் நம்பிக்கை
          உண்டெனக்கு..
          என் மனம் பலமுறை
          மரணித்துள்ளது...!

🪶.     என் தாய் ஏற்றிய
           தீபம் நான்..
           அவள் இருக்கும்வரை
           அணைய மாட்டேன்...!

🪶.     மலையேரும் போதெல்லாம்
           பசுமை புரட்சியில்
           பங்குகொள்கிறது மனம்...!

🪶.     வாழ்வெனும் வானில்
           இரைதேடும் பருந்தாய்                             திரிகின்றேன்..
           இலக்கு எதுவும் இதுவரை                       தென்படவில்லை.இறக்கைகள்             வலிக்கும் முன் இறையை                       அறிய வேண்டும்...!

🪶.     என் கவிதைகளை 
           நானே உண்கிறேன்...
           உப்பும் உரப்பும்
           சரி பார்ப்பதற்கு...!

🪶.      கடவுள் எங்கே
            என்று கேட்டேன்...
            கல்லுக்குள் ஒளிந்துள்ளான்
            என்றான் சிற்பி...

🪶.      சிவகாமியை கவர்ந்து                              வந்துவிட்டேன்
            சிந்தையில் வைத்து..
            ஆயனர் என்ன செய்வார்...!

🪶.      சோகம் தந்த இறைவன்
            சுகத்தையும் தருவான் ...
            யுத்தத்திற்கு தயாராகு....!

🪶.       இரவின் வாசல்
            கொஞ்சம் கடுமையானது                         தான்..
             உள்ளே சென்று பார் மிகவும்                   இனிமையானது...!

🪶.       என் கவிதைக்கு மட்டும்                            ஏராளமான கைகள்                                    கண்ணில்                                                   படுவோரையெல்லாம் கட்டிக் கொள்ளும்...

🪶.     என் கற்பனைகளையே நான்                 காதலிக்கிறேன்... 
           அது என்றும்         என்னை
           காயப்படுத்துவதில்லை...

🪶.      காணும் அனைத்தையும்                          காதலியுங்கள்..
            சில காயமானலும் 
            பல மருந்தாகும்..!

🪶.      வலிகளும் வேதனைகளும்                    வரிகளாகவே வெளிப்படுகிறது  
          அந்த கவிஞனுக்கு...!

🪶.    இன்ப துன்பத்திலும்
          இகழும் புகழும் நிலையிலும்
          இறைவனை மறக்காதே....! 

🪶.     இறைவனை தேடுவதை விட்டு               விட்டு உணர முயற்சி செய்..
           உண்மை விளங்கும்..!

🪶.     புத்தக சுமையை
           பழகிக் கொள்ளுங்கள்.. 
           வாழ்வின் சுமை எளிதாகும்..!

🪶.     ஓடிக்கொண்டே இரு
           ஓடுவதை நிறுத்தி விட்டால்
           ஊரார் எரித்துவிடுவர்
           சொற்களால்...!

🪶.      கற்சிலையும் கண்ணீர்                              வடிக்கிறது
            கோயில் முன்பு கையேந்தும்
            குழந்தையைக் கண்டு...

🪶.      உன்னிடம்                                                      கையேந்துபவனுக்கு
            உதவிட மறக்காதே...
            கையேந்துபவன்
            கடவுளாகவும் இருக்கலாம்..!

🪶.      பெண்ணில்லா வீடு
           கண்ணில்லா மனிதனைப்                       போல நடப்பது தெரியும்
           நடைபாதை தெரியாது..!






Comments

Popular posts from this blog

காதலின் தீபம்

வா வா நிலவே

பாட்டு ஒன்னு பாடவா